புஜாரா இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிட் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுபவர். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்படும் புஜாரா, நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.




இந்த நிலையில் சென்னை அணியில் இணைந்து மஞ்சள் நிற உடையணிந்து விளையாடுவதற்கு, தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ராபின் உத்தப்பா, மொயின் அலி உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருப்பதால் தொடக்க வீரராக புஜாராவிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட புஜாரா, ஒருநாள் போட்டிகளில் மீண்டும் இடம்பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பாக ஐ.பி.எல். தொடரை பயன்படுத்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோது, புஜாரா தொடக்க வீரராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.