பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 60 கிலோ எடை பிரிவு கொண்ட  ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார் கபில் பார்மா. 


வியாழன் அன்று நடந்த பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024ல் ஆடவருக்கான 60 கிலோ ஜே1 பாரா ஜூடோ போட்டியில் ஜூடோகா கபில் பர்மர் வெண்கலம் வென்றதால், இந்திய அணி பதக்க எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.


வில்வித்தை வீரர்கள் ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஆகியோர் கலப்பு ரிகர்வ் போட்டியின் அரையிறுதியில் தோல்வியடைந்தனர், எனவே வெண்கலத்திற்காக விளையாட உள்ளனர்.