ஹசரங்கா புண்ணியத்தில் வென்றது ஸ்ரீலங்கா; தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
மூன்றாவது டி20 போட்டியை வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரை 2க்கு 1 என்கிற விகிதத்தில் வென்றது. 14.3வது ஓவரில் 82 ரன்கள் எடுத்த இலங்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அந்த அணியின் டிசில்வா 23 ரன்களுடனும், ஹசரங்கா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர். ராகுல் சஹார் மட்டும் இந்தியா தரப்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூன்றாவது விக்கெட்டை இழந்த இலங்கை: தனியாளாக போராடும் ராகுல் சஹார்!
இலங்கை அணி மூன்றாவது விக்கெட்டை இழந்த நிலையில், இதற்கு முன் இரு விக்கெட்டுகளை எடுத்த ராகுல் சஹார் இந்த மூன்றாவது விக்கெட்டையும் வீழ்த்தினார். 12.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இலங்கை.
மாறுமா ஆட்டம்... இந்திய பவுலர்கள் காட்டம்! இரண்டாவது விக்கெட் இழந்த இலங்கை!
இலங்கை அணி தற்போது பனுகா விக்கெட்டை இழந்துள்ளது. 27 பந்தில் 18 ரன்கள் எடுத்த அவர், ராகுல் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சஹார் இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அப்பாடா.... ஒரு விக்கெட் போச்சு: 23க்கு 1 விக்கெட் இழந்தது இலங்கை!
இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இலங்கை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. துவக்க வீரர்களை கழற்ற இந்திய பவுலர்கள் எடுத்த முயற்சி நீண்ட இடைவெளிக்கு பின் பலனளித்தது. அவிஸ்கா பெர்ணாண்டோ விக்கெட் விழ, 23 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்துள்ளது இலங்கை ராகுல் ஜஹார் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். 6 ஓவரில் 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது இலங்கை.
இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஷிகர்தவாண் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் வென்றுவிட்ட நிலையில், இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் கடைசி டி-20 போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும்.