சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 5-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த ரன்களை கொல்கத்தா அணி ஈஸியாக சேஸ் செய்துவிடும் என ரசிகர்கள் நம்பினார். ஆனால், நடந்ததோ வேறு.
கொல்கத்தா ஓபனிங் பேட்ஸ்மேன் ரானா, சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால், மோர்கன், ரஸல் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். கடைசிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிபெற வைத்துவிடுவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருந்தது. ஆனால், அனுபல பவுலர்களான போல்ட், பும்ரா சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்திவிட்டனர்.
இந்நிலையில், கொல்கத்தா அணி அடைந்த தோல்விக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஏமாற்றம் அளிக்கும் செயல்பாடு. குறைந்தபட்சமாக கூற வேண்டுமென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம்’ எனப் பதிவிட்டார்.