Just In

WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?

AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!

AUS vs SA WTC Final: ஃபயராக பந்துவீசும் தென்னாப்பிரிக்கா.. அடுத்தடுத்து விக்கெட்டுகள் காலி.. ஆஸ்திரேலியாவை காப்பாற்றப்போவது யாரு?

மதுரையில் மாபெரும் விழா: விரைவில் முதலமைச்சர் பங்கேற்பு - அமைச்சர் மூர்த்தி தகவல்

WTC Final 2025: தோல்வியே சந்திக்காத பவுமா... தடுத்து நிறுத்துவாரா பேட் கம்மின்ஸ்...WTC இறுதிப்போட்டி இன்று தொடக்கம்
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
CSK-வுக்கு விசில் போடு - தோனியின் பரம ரசிகர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ...!
’’இந்த முறை நிச்சியமாக வெற்றி பெறும் தோனியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருங்கள்’’
Continues below advertisement

சி.எஸ்.கே. ரசிகர் கோபாலகிருஷ்ணன்
கடலூர் மாவட்டத்தைச் திட்டக்குடி அருகேயுள்ள அரங்கூரைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் என்பதால் அவருக்கு தோனி மீதான தனது நம்பிக்கை, அன்பு மற்றும் , சிஎஸ்கே அணியின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தனது வீட்டை முழுமையாக மஞ்சள் வண்ணத்தில் மாற்றியதுடன் மேலும், வீட்டின் முகப்பில் தோனியின் உருவப் படங்களை வரைந்து அந்த வீட்டிற்கு #Home of Dhoni fan பெயரிட்டு இருந்தார். இந்த வீடு குறித்து தோனி ஒரு நேர்காணலில் இது போன்ற நிகழ்வுகள் மக்கள் என் மீதும் சிஎஸ்கே மீதும் மக்கள் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்துள்ளார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி கொரோனவிர்க்கு முன் நடந்த முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போனாலும், தற்பொழுது நடந்த இரண்டாம் பாதியில் சிறப்பான ஆடத்தினை வெளிப்படுத்தி இன்று நடைபெற உள்ள இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது அதனால் கோபிகிருஷ்ணன் சிஎஸ்கே அணி இன்று நடக்கும் இறுதி போட்டியில் கேகேஆர் அணியினை வீழ்த்தி வெற்றி பெறும் என அனைவருக்கும் நம்பிக்கை கூறும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில்,
கடந்த 2017ஆம் ஆண்டு வரையில் தடை செய்யப்பட்டிருந்த பின் சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை என சிஎஸ்கே அணியையும் தோனி அவர்களையும் அனைவரும் கேலியாக பேசி வந்தனர் அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் எனது #Home of Dhoni fan என்ற இல்லத்தினை கட்ட வேண்டும் என எண்ணி சென்ற வருடம் கட்டி முடித்து தோனி சாரின் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்ட முயற்சி செய்தேன், இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டம் நெருப்பு ஆட்டமாக இருக்கும், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி இறுதி போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற முடியவில்லை என்றாலும் இந்த முறை நிச்சியமாக வெற்றி பெறும் தோனியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது நமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருங்கள், சி.எஸ்.கேக்கு விசில் போடு என வீடியோவில் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.