ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ ஏலம் விட்டது. 3 நாட்களாக நடைபெற்ற இந்த மின்னணு ஏலம் நேற்று முடிவடைந்தது. மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்ட இந்த ஏலத்தில் ஹாட்ஸ்டார், வயாகாம் 18, டைம்ஸ் ஆகியவை உரிமங்களை வாங்கி உள்ளன.


தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமை


ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. ஒரு ஆட்டத்துக்கு ரூ.57.50 கோடி வீதம் 410 ஆட்டங்களுக்கு இந்த தொகையை ஸ்டார் குழுமம் செலுத்தும். அதேவேளையில் டிஜிட்டல் உரிமத்தை ஒரு ஆட்டத்துக்கு ரூ.50 கோடி வீதம் 410 ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமையை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது.



பேக்கேஜ் சி


மின்னணு ஏலத்தின் 3-வது நாளான நேற்று 18 போட்டிகளுக்கு (முதல் போட்டி, பிளே ஆஃப் சுற்றின் 4 ஆட்டங்கள், வார இறுதியில் ஒரே நாளில் நடத்தப்படும் இரு ஆட்டங்கள்) டிஜிட்டல் உரிமை இல்லாத தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை வயாகாம் 18 குழுமம் கைப்பற்றியது. 5 வருட காலத்தில் 98 ஆட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுப்பை அந்த நிறுவனம் ரூ.3,257.52 கோடிக்கு ஏலம் எடுத்தது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


பேக்கேஜ் டி


கடைசியாக இந்திய துணைக் கண்டங்களைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஒரு ஆட்டத்துக்கு ரூ.2.58 கோடி வீதம் 410 ஆட்டங்களுக்கு ரூ.1,058 கோடியில் ஏலம் எடுக்கப்பட்டது. இதை வயாகாம் 18 மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவை எடுத்துள்ளன. இதன்படி ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை வயாகாம் 18 பெற்றுள்ளது. அதேவேளையில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை டைம்ஸ் இன்டர்நெட் கைப்பற்றியுள்ளது.



ஒட்டுமொத்த லாபம்


4 பிரிவுகளில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், “தொடக்கத்தில் இருந்தே ஐபிஎல், வளர்ச்சியுடன் ஒன்றுபட்டுள்ளது, இன்றைய நாள் இந்திய கிரிக்கெட்டுக்கு மறக்க முடியாத நாளாகும். மின்னணு ஏலத்தின் மூலம் ஐபிஎல் மதிப்பு 48,390 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இப்போது ஒரு போட்டியின் மதிப்பின் அடிப்படையில் உலக அரங்கில் மிகவும் மதிப்புமிக்க 2-வது விளையாட்டாக ஐபிஎல் மாறியுள்ளது”, என மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.