2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், தக்க வைக்கப்பட்ட வீரர்களுக்காக செலவு செய்த பணம்போக ஒவ்வொரு அணிக்கும் மீதம் இருக்கும் பணம் எவ்வளவு என்பது பற்றிய முழு விவரம் இதோ:

அணி தக்க வைக்கப்பட்ட வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் தக்க வைக்கப்பட்டதற்கான செலவு மீதமுள்ள பணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 1 42 கோடி ரூபாய் 48 கோடி ரூபாய்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 2 34 கோடி ரூபாய் 48 கோடி ரூபாய்
டெல்லி கேப்பிடல்ஸ் 4 1 39 கோடி ரூபாய் 47.50 கோடி ரூபாய்
மும்பை இந்தியன்ஸ் 4 1 42 கோடி ரூபாய் 48 கோடி ரூபாய்
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 3 1 33 கோடி ரூபாய் 57 கோடி ரூபாய்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 1 22 கோடி ரூபாய் 68 கோடி ரூபாய்
பஞ்சாப் கிங்ஸ் 2 0 16 கோடி ரூபாய் 72 கோடி ரூபாய்
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 1 28 கோடி ரூபாய் 62 கோடி ரூபாய்

இப்படி 8 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அளித்த பின்பு புதிய இரண்டு அணிகள் வீரர்களை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளும் 2 இந்திய வீரர் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு அணிகளுக்கும் டிசம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடிந்த பிறகு ஜனவரி மாதத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க: IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண