IPL Mega Auction 2022: ஐபிஎல் ஏலம்: மும்பையில் சுழல் வீசப்போகும் தமிழன் முருகன் அஷ்வின் !
IPL Mega Auction 2022 : தமிழ்நாடு வீரர் முருகன் அஷ்வினை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வீரர் முருகன் அஷ்வினை 5 முறை ஐபிஎல் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி 1.60 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் வீரர்கள் ஏலம் தொடர்பான உடனுக்குடன் தகவல்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம