IPL Mega Auction 2022: ஷர்துல் தாகூரையும் கோட்டை விட்ட சிஎஸ்கே...ப்ளான் போட்டு தூக்கிய டெல்லி அணி !

IPL Mega Auction 2022 :ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஷர்துல் தாகூரை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுக்க தவறியுள்ளது.

Continues below advertisement

ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

Continues below advertisement

இந்நிலையில் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூரை எடுக்க பல அணிகள் போட்டி போட்டு கொண்டு இருந்தன. 2 கோடி என்ற ஆரம்ப விலையில் இருந்து ஷர்துல் தாகூரின் விலை 10 கோடி ரூபாய்க்கு மேல் சென்றது. இறுதியில் ஷர்துல் தாகூரை 10.75 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணி ஷர்துல் தாகூரை கோட்டை விட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement