2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணி தோனியின் அரைசதம் கடந்ததால் 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 


 


இதைத் தொடர்ந்து 132 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க முதலே அதிரடி காட்ட தொடங்கினர். இதன்காரணமாக 6 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 43 ரன்கள் எடுத்தது. 


 


தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது பிராவோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த நிதிஷ் ரானா 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். அவர் 21 ரன்கள் எடுத்திருந்த போது பிராவோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண