ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பயோபபுள் தொடர்ந்து நீடிக்க விருப்பமில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணி இவரை ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது ஜேசன் ராய் விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரரை அறிவிப்பது தொடர்பாக குஜராத் அணி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.  மும்பை, பூனேவில் உள்ள 4 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

லிக் சுற்று போட்டிகள் விவரம்:

மும்பை வான்கடே மைதானம்  20 போட்டிகள்
மும்பை சிசிஐ மைதானம் 15 போட்டிகள்
மும்பை டி.ஒய் படீல் மைதானம் 20 போட்டிகள்
பூனே எம்.சி.ஏ மைதானம் 15 போட்டிகள்

அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். 

க்ரூப் விவரங்கள்:

க்ரூப் ஏ க்ரூப் பி
மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ்

ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் ஒவ்வொரு அணியும் அதே பிரிவைச் சேர்ந்த மற்ற அணிகளுடன் இரண்டு போட்டிகளிலும், மற்றொரு பிரிவில் அதே இடத்தில் உள்ள இன்னொரு அணியுடன் 2 போட்டிகளிலும், இன்னொரு பிரிவின் மீதம் இருக்கும் அணிகளுடன் தலா 1 போட்டியிலும் விளையாட உள்ளது. மார்ச் 26ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண