2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 


சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே 3 ரன்களில் உமேஷ் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் முதல் 6 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. 


அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 8ஆவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ராபின் உத்தப்பா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அம்பத்தி ராயுடுவும் ரன் அவுட் ஆகினார். தற்போது வரை சென்னை அணி 52 ரன்களுக்கு  4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.