சர்வதேச கிரிக்கெட் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எவ்வளவு முக்கியத்துவம் பெரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தவகையில் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி அதே அளவிற்கு முக்கியத்துவம் பெரும் என்றால் அது சென்னை-மும்பை போட்டி தான். அந்த அளவிற்கு இப்போட்டி முக்கியத்துவம் பெற காரணம் என்ன?


இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பட்டம் வென்ற அணிகள் என்றால் அது சென்னை மற்றும் மும்பை தான். மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். கடந்த 4 ஐபிஎல் தொடரில் சென்னை அல்லது மும்பையே கோப்பையை கைப்பற்றி வருகின்றனர். அதனால் இம்முறையும் கோப்பையை வெல்ல சென்னை-மும்பை அணிகள் இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் தற்போது வரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மும்பை 6 போட்டிகளிலும் சென்னை ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 



நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2  தோல்வி மற்றும் 5 வெற்றியை பெற்றுள்ளது. அதேசமயத்தில் மும்பை அணி தற்போது வரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளது.  அத்துடன் நடப்பு தொடரில் ஏற்கெனவே மே 1ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டின் சூறாவளி ஆட்டத்தால் த்ரில் வெற்றிப் பெற்றது. ஆகவே அந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி சிறந்த பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எனவே இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 






இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டப்பட்டுள்ளது. அதில், "நம்ம முசிக்கை இறக்கு ல" எனப் பதிவிட்டுள்ளது. அந்த பதிவு உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடலான விசில் போடு பாடலையும் பதிவிட்டுள்ளது. போட்டி தொடங்க இன்னும் 2 மணி நேரம் உள்ள நிலையில் முன்பாகவே தங்களுடைய ரசிகர்களை விசில் அடிக்க தயாராக இருக்கும் படி செய்ய இந்த பதிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - இதுவரை நேருக்கு நேர் நடந்தது என்ன? முழு விவரம் உள்ளே...!