இந்தியா - இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டி-20 போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரிதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ரானா, சேத்தன், தேவ்தட் படிக்கல் ஆகியோர் அறிமுக வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


எளிதாக இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, டி-20 தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது முதல் இரு அணிகளும் சில தவறுகளை செய்து வந்தனர். இந்திய அணி சார்பில் கேட்ச் மிஸ் செய்வது, மிஸ் ஃபீல்ட் செய்வது என்பது தொடர்ந்தது, இலங்கை அணியை பொருத்தவரை தவறான ஷாட்களால் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.


இதனால், எளிதாக நடந்து முடிக்க வேண்டிய இரண்டாவது இன்னிங்ஸ், கடைசி பால் வரை பரபரப்பாக சென்றது. இலங்கை அணி சார்பாக மினோத் பனுகா மற்றும் தனஜெய் டி சில்வா ஆகியோர் மட்டும் 30+ ரன்களை எடுத்து அணிக்காக ஸ்கோர் செய்தனர். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.


கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியின் 19வது ஓவரின்போது, 12 பந்துகளில் 20 ரன்கள் இலங்கை அணிக்கு தேவைப்பட்டது, இந்த ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், ஒரே ஓவரில் 12 ரன்கள் கொடுத்து இந்திய அணியை அப்செட் செய்தார். நிதானமாக களத்தில் நின்ற கருணரத்னே, தனஜெயா இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 19.4 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் போட்டியை வென்றது இலங்கை அணி. இதனால், நாளை நடைபெற இருக்கும் கடைசி டி-20 போட்டி தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மாணிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.


முன்னதாக, முதல் இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இந்திய அணி, 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) 45 ரன்கள் எடுத்தது. 7 ஆவது ஓவரில் 49 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. கெய்க்வாட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 40 ரன்களில் வெளியேறினார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கி விளையாடினார்.






பின்னர், 99 ரன்களில் 3 ஆவது விக்கெட்டை இழந்த இந்திய அணி, 16 ஓவர்களின் முடிவில் 100 ரன்கள் எடுத்தது. அடுத்து சஞ்சு சாம்சன் வெளியேறியபோது, இந்தியா 104/4 என்று இருந்தது. இலங்கை அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறைந்த ஸ்கோர் என்பதால், எதிரணி வெற்றி இலக்கை அடைய எளிதானது.