மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படிஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 

இதையடுத்து, வரும் பிப்ரவரி 23ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணி மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் முடிவாகவில்லை என்றாலும், இன்று நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி தீர்மானிக்கும். 

குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள அணி, குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியா அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும். மகளிர் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியா அணி எப்போதும் பலம் வாய்ந்த அணியாகவே வலம் வருகிறது. நடப்பு தொடரிலும் ஆஸ்திரேலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. குரூப் ஏ பிரிவில் இருந்து ஏற்கனவே இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் வெளியேறினர். இதையடுத்து, நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா அணிகளில் ஏதேனும் ஒரு அணி குரூப் ஏ பிரிவில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. 

குரூப் பி பிரிவில் யார் அரையிறுதிக்கு செல்வார்கள்? 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். மறுபுறம், தென்னாப்பிரிக்கா அணி வென்றால், நான்கு புள்ளிகளை பெற்று நியூசிலாந்தை விட சிறந்த நிகர ரன் ரேட்டுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும். 

குரூப் பி நிலைமை என்ன? 

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்தியா தலா 6 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளது. இதில், இந்தியா லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் உள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகள் விளையாடி 3 வெற்றியுடன் அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதிபெற்றது. இங்கிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. குரூப்-பியில் இருந்து பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகள் ஏற்கனவே போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.  இங்கிலாந்து மூன்று போட்டிகளில் +1.776 நிகர ரன்ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவின் நிகர ரன்ரேட் +0.253 ஆகும். பாக்கிஸ்தான் அணி இங்கிலாந்தை அதிக வித்தியாசத்தில் வீழ்த்தினால், அது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படலாம். இருப்பினும் இங்கிலாந்தின் தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கமாட்டார்கள் என்று தெரிகிறது. இங்கிலாந்து அணி அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தினால்  இந்தியா முதலிடத்தை எட்டும், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட வேண்டிய அவசியமில்லை. மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இது தவிர, காமன்வெல்த் போட்டியின் இறுதிப் போட்டியிலும் தோல்வியடைந்து. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்திய அணி முதல் இடத்தை அடையும். இதன் காரணமாக, இந்திய அணி அரையிறுதியில் குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அல்லது தென்னாப்பிரிக்காவை வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி எதிர்கொள்ளும். 

அரையிறுதியில் சாத்தியமான போட்டி

தேதி அணிகள் இடம்
பிப்ரவரி 23 ஆஸ்திரேலியா vs இந்தியா சிட்டி எண்ட்
பிப்ரவரி 24 இங்கிலாந்து vs நியூசிலாந்து/தென்னாப்பிரிக்கா சிட்டி எண்ட்