வம்பிழுத்த லிட்டன் தாஸுக்கு, முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி உடனடியாக பதிலடி கொடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்டானது சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் உள்ள தேசிய மைதானத்தில் டிசம்பர் 22 முதல் 26 வரை நடைபெறுகிறது.  இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை வங்காளா தேச அணி தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே வங்காள தேச அணிக்கு சிறப்பான தொடக்கமோ கூட்டணியோ அமையாததால், தொடர்ந்து தடுமாறி வந்தது. 






வங்காள தேச அணியின் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய லிட்டன் தாஸ், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜைப் நோக்கி காதில் கைவைத்துக்கொண்டு சைகை காட்டியபடி நடந்ர்து வந்தார். உடனே மைதானத்தில் இருந்த நடுவர் அவர்களை மோதல் ஏற்படாதவாறு பிரித்து விட்டார்.  இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நேரத்தில் லிட்டன் தாஸை, முகமது சிராஜ் கிளீன் போல்டாக்கினார். இதன் பின்னர் லிட்டன் தாஸ் செய்ததைப் போலவே முகமது சிராஜ் மற்றும் விராட்கோலி ஆகியோர் லிட்டன் தாஸ் செய்ததைப் போலவே காதில் கைவத்தபடி செய்கை காட்டினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 41 ரன்களாக இருந்தபோது, சுப்மன்கில் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து, அணியின் ஸ்கோர் 45 ரன்களாக இருந்தபோது கே.எல். ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அணியின் ஸ்கோர் 48 ரன்களாக இருந்த போது விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 


இந்த சரிவில் இருந்து மீளுமா என நினைத்துக் கொண்டு இருக்கையில் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா கூட்டணி அணியை மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீட்டது. அதன் பின்னர், அணியின் ஸ்கோர் 112 ரன்களாக இருந்தபோது  அதிரடியாக ஆடிவந்த ரிஷப் பண்ட் 45 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர், புஜாராவுடன் கைகோர்த்த ஸ்ரேயஸ் ஐயர் மிகவும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர்கள் கூட்டணி தொடர்ந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றது. இதன்பின்னர், அணியின் ஸ்கோர் 261 ரன்களாக இருந்த போது 203 பந்தில் 90 ரன்கள் குவித்து சதத்தினை நெருங்கிக்கொண்டு இருந்த புஜாரா எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். 


அஷ்வின் அரைசதம்:


இதன் பின்னர் களமிறங்கிய அக்‌ஷ்ர் பட்டேல் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்தநிலையில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாம் நாள் தொடக்கத்திலேயே 86 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அக்சார் பட்டேல் 14 ரன்களில் வெளியேற, அடுத்து உள்ளே வந்த அஷ்வின் - குல்தீப் ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர் பந்துகளை பதம் பார்க்க தொடங்கினர். இருவரும் இணைந்து 92 ரன்கள் சேர்க்க, நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் கடந்த அஷ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். 


தொடர்ச்சியாக, குல்தீப் யாதவ் 40 ரன்களிலும், உமேஷ் யாதவ் 2 சிக்ஸர்கள் அடித்து 15 ரன்களுடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 133.5 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.