டி20 உலகக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. அவர்களது பந்துவீச்சில் தடுமாறிய தென்னாப்பிரிக்கா அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃய்படர் - ஃபின் ஆலன் ஆட்டத்தை தொடங்கினார். ஃபின் ஆலன் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். இதனால், 12.5 ஓவர்களிலே நியூசிலாந்து அணி 173 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது.
ஃபின் ஆலன் 33 பந்துகளில் 10 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
