Jaydev Unadkat Released:  இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில்  முதலாவது டெஸ்ட் போட்டி ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. மீதமுள்ள மூன்று போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உதன்கட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து இந்திய அணி பிசிசிஐயில் தெரிவித்துள்ளதாவது, பெங்கால் அணிக்கு எதிராக பிப்ரவரி 16ஆம் தேதி முதல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள மாஸ்டர்கார்டு ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சௌராஷ்டிரா அணியின் சார்பில் ஜெய்தேவ் உதன்கட் களமிறங்கவேண்டி உள்ளதால், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.