இந்திய டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகிய பிறகு, தென்னாப்பிரிக்க தொடர் முதல் இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்தது. இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஒருநாள் போட்டி  கேப்டன் ரோகித்சர்மா இன்று அளித்த பி.சி.சி.ஐ.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,



ODI Captain Rohit Sharma | ”மக்களின் பேச்சை கட்டுப்படுத்த முடியாது” : வீரர்களுக்கு ரோஹித் ஷர்மா சொன்ன மெசேஜ்..


“ நீங்கள் இந்தியாவிற்காக எப்போது விளையாடினாலும் அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். மக்கள் பலரும் ஆதரவாகவும் பேசுவார்கள். எதிர்மறையாகவும் பேசுவார்கள். ஆனால், எனது தனிப்பட்ட முறையில் நான் எனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பேன். இதை நான் கேப்டனாக கூறவில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக கூறுகிறேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தமாட்டேன். ஏனென்றால், மக்கள் பேசுவதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. இதை நான் லட்சம் முறை பார்த்துவிட்டேன். இதுதான் அணிக்கு நான் சொல்ல விரும்பும் கருத்து.






ஒரு உயர்தர தொடர் ஆடும்போது பல்வேறு பேச்சுக்கள் எழும். நாம் நம் கையில் என்ன இருக்கிறது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதை வெற்றி பெற வேண்டும். அதை வைத்து எப்படி விளையாடுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வெளியில் பேசுவது எல்லாம் அர்த்தமற்றது என்று நினைக்கிறேன்.




நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம். வீரர்கள் மத்தியில் ஒரு வலுவான உறவை உருவாக்குவதே முக்கியம். நாம்  இலக்கை அடைய எப்படி உதவுகிறோம் என்பதே முக்கியம். பயிற்சியாளர் ராகுல் கண்டிப்பாக எங்களுக்காக இதை செய்கிறார். நாங்கள் அதை நோக்கி முன்னேறுகிறோம்.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் பார்க்க..



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண