வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


இந்திய அணியில் அவேஷ் கானிற்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றுவிடும். 


இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விலகிய இன்றைய போட்டியிலும் விலகியுள்ளார். அவர் இன்னும் 100 சதவிகிதம் உடற்தகுதி பெறவில்லை என்பதால் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி முழு முனைப்புடன் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணியில் ஹோல்டர், கீமோ பால் மற்றும் கார்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 


 






இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக போராடும் என்று கருதப்படுகிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் திரும்ப உள்ளார்.அவருடன் சேர்ந்து குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட்,ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோரும் அணிக்கு திரும்ப உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண