இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஆட்டத்தை தொடங்கினர். 

Continues below advertisement

கேப்டன் கில் அபார அரைசதம்:

தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 18 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர், ஜெய்ஸ்வால் - தேவ்தத் படிக்கல் இருவரும் இணைந்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் நோக்கி நெருங்கிய ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு போல்டானார். பின்னர், ஜெய்ஸ்வால் - சுப்மன்கில் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் இணைந்து நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடினர். சிறப்பாக ஆடிய படிக்கல் விளாசினார். அரைசதத்தை கடந்தும் அவர் சிறப்பாக ஆடிய நிலையில், மறுமுனையில் கேப்டன் சுப்மன்கில் அரைசதம் விளாசினார். 50 ரன்கள் எடுத்த சுப்மன்கில் அஷிதா ஃபெர்னாண்டோ பந்தில் அவுட்டானார். அதன்பின்னர், வந்த ரிஷப் பண்ட் 3 ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் அவுட்டானார்.

Continues below advertisement

படிக்கல் சதம்:

பின்னர், ஜடேஜா படிக்கல்லுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிய படிக்கல் சதம் விளாசினார். முதல் டெஸ்டிலும் படிக்கல் சதம் விளாசிய நிலையில், இரண்டாவது டெஸ்டிலும் படிக்கல் சதம் விளாசியுள்ளார். இந்திய அணி மிடில் ஆர்டரில் 3வது இடத்திற்கு சரியான வீரர் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், படிக்கல் தற்போது அடுத்தடுத்த டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த படிக்கல் 193 பந்துகளில் 117 ரன்கள் எடுத்த நிலையில் நுவந்தா பந்தில் போல்டானார். இந்த தொடரில் 3 இன்னிங்சில் பேட் செய்துள்ள படிக்கல் 2 சதங்களுடன் 328 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் 3வது வீரருக்கான இடத்தில் சாய் சுதர்சன் ஆடி வந்தார். தற்போது படிக்கல்லின் அபாரமான ஆட்டத்தால் சாய் சுதர்சனுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைப்பது சவாலாகியுள்ளது.

இந்திய அணியில் 2022ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இடம் கிடைத்த வாய்ப்பை படிக்கல் அபாரமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

முதல் இன்னிங்சில் வலுவான ரன்களை குவிக்குமா?

படிக்கல்லின் இந்த அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. போட்டி நடந்து வரும் இந்த கொழும்பு மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்பதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணிக்காக ஜடேஜா - துருவ் ஜுரல் இருவரும் ஆடி வரும் நிலையில் சரன்ஷ் ஜெயின், மானவ் சுதர், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இன்னும் வெளியில் உள்ளனர்.