இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 49 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 234 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதனால், 284 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்வின் வீசிய பந்தில் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய தொடக்க வீரர் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்களை எடுத்திருந்தது.




நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி அளித்துள்ள பேட்டியில், “ மூன்று முடிவுகளும் சாதகமாகவே வந்ததாக நான் கருதுகிறேன். நாங்கள் நல்ல எண்ணத்துடன் பேட்டிங் செய்தால், இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பிறகு நாங்கள் கண்டிப்பாக இலக்கை அடைந்துவிடுவோம். இந்தியர்களின் பார்வையில், எங்களை இலக்கை அடையவிடாமல் தடுத்து நிறுத்திவிடுவோம் என்று முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். வில்யங் ஆட்டமிழந்தது பற்றி அவரிடம் நான் பேசவில்லை. ஆனால், அவர் ஆட்டமிழந்தது எனக்கு மிகுந்த அதிருப்தியாக இருந்தது. “ இவ்வாறு அவர் கூறினார்.


கான்பூர் டெஸ்டின் கடைசி நாளான நாளை இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. நியூசிலாந்தின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில்லே, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றிநிகோலஸ் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியில் நியூசிலாந்தின் பேட்டிங்கிற்கு குடைச்சல் கொடுக்க அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் சுழலில் காத்துள்ளனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் குடைச்சல் கொடுக்க காத்துள்ளனர்.




நியூசிலாந்து அணியின் வில் யங் ஆட்டமிழந்தது அந்த நாட்டு ரசிகர்களுக்கும், அந்த அணிக்கும் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வின் பந்தில் நடுவரால் அவருக்கு எல்.பி.டபுள்யூ அளிக்கப்பட்டது. அப்பீல் செய்வதற்கான நேரம் முடிந்த சில விநாடிகள் கழித்தே வில்யங் அப்பீல் செய்தார். இதனால், நேரம் முடிந்துவிட்டதாக அவர் அவுட் என்றே அறிவிக்கப்பட்டது. ஆனால், டி.வி. ரீப்ளேயில் அது நாட் அவுட் என்று தெரியவந்தது. வில் யங் முதல் இன்னிங்சில் 89 ரன்களை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண