இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தது. எனினும் ஆஸ்திரேலிய அணி அசத்தலாக விளையாடி அதை சேஸ் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி நாளை நாக்பூரில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய டி20 தொடரின் மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்களை வாங்க அதிகாலை முதல் ரசிகர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக வரிசையில் நின்று கொண்ட ரசிகர்களுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 


 






இதன்காரணமாக அங்கு இருந்த கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த தடியடியில் தற்போது வரை சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


 






 






 






 


இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.