Hardik Pandya : ரோகித்துக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. மீண்டும் கேப்டனாகும் பாண்டியா? கம்பீர் போடும் கணக்கு

Hardik Pandya :ரோகித் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொதப்பினால் மீண்டும் இந்திய அணி பாண்டியா நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா விரைவில் இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

Continues below advertisement

நீண்ட காலமாகவே, ரோஹித் சர்மா இல்லாத  பல தொடர்களில் அணியை வழிநடத்திய ஹார்திக் பாண்டியா,ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 இந்திய அணியின் கேப்டனாக ரோகித்துக்கு பிறகு இருப்பார் என்று கூறப்பட்டது.

கடந்த ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, பிசிசிஐ சூர்யகுமார் யாதவை இந்தியாவின் முழுநேர டி20 கேப்டனாக நியமித்தது. கூடுதலாக, இளம் பேட்டர் ஷுப்மான் கில் ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டன் பதவிக்கு நியமிக்கப்பட்டதால் ஹார்திக் புறக்கணிக்கப்பட்டார். சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அக்சர் படேல் ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

மீண்டும் பாண்டியா கேப்டன்: 

வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்லத் தவறினால், ஹார்திக் இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னால் "தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஹார்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க விரும்பினார், ஆனால் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் ஷுப்மான் கில்லைத் துணை கேப்டனாக நியமிக்க பிடிவாதமாக இருந்தனர்" என்று கூறப்பட்டது.

தற்போதைய கேப்டன் சூர்யகுமார் பேட்டிங்கில் சொதப்பி வருவதால், ஹார்டிக் டி20 போட்டிகளில் தனது கேப்டன் பதவியை மீண்டும் பெறக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் கேப்டன்: 

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது ஹார்டிக் ரோஹித்தின் துணைத் தலைவராக இருந்தார், ஆனால் உடற்தகுதி கவலைகள் காரணமாக பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

பிசிசிஐ-யின் சில தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர் கம்பீரும் ஹார்திக் கடந்த காலத்தில் நிறைய  உடற்தகுதி பிரச்சினைகள் சந்தித்தார், இதன் காரணமாக அவர் தனது கேப்டன் பதவியை இழந்தார், ஆனால் அவரது ஃபார்ம் அற்புதமானது.

மறுபுறம், சூர்யகுமார் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அணியில் அவரது இடம் சமீப காலமாக பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ரோகித்துக்கு கடைசி வாய்ப்பு: 

அதே போல ஒரு நாள் போட்டிகளின் கேப்டனான ரோகித் சர்மாவும் கடந்த 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உட்பட 166 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் அவரது பேட்டிங்கும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தான் ரோகித் சர்மாவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரோகித் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொதப்பினால் மீண்டும் இந்திய அணி பாண்டியா நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement