ஐபிஎல் தொடரை 5 முறை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஜெயவர்தனே அந்தப் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு கோலபல் பெர்ஃபாமன்ஸ் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. 


இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீறர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.