நெல்லையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அகாடமி துவக்க நிகழ்வு சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாலாஜி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, "தோனி கிராமத்தில் இருந்து தான் வந்துள்ளார். இப்போது மிக சிறந்த விளையாட்டு வீரர். கடந்த காலங்களில் பாம்பே, பெங்களூர், சென்னை ஆகிய பகுதியில் இருந்துதான் கிரிக்கெட் வீரர்கள் வந்தார்கள். ஆனால் இன்று கிராமத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வசதி தற்போது இருக்கிறது. நான் எப்போதும் அப்துல் கலாமை நினைக்கக் கூடியவன்.  அவர் கனவு காணுங்கள், அது கண்டிப்பாக நிறைவேறும் என தெரிவித்தார். அதன்படி மாணவர்கள் கனவு காண வேண்டும். கண்டிப்பாக அது நடக்கும்" எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “கிராம பகுதிகளில் கிரிக்கெட் போட்டி மிக நன்றாக வளர்ந்து உள்ளது. கிராமப் பகுதி மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் இருந்தால் அவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் மேற்கொள்ளப்படும். கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு தான். இன்றைய பொழுதில் கிரிக்கெட் நன்றாக வளர்ந்து உள்ளது. கிரிக்கெட்டை நன்றாக விளையாடினால் உங்களது வாழ்க்கையை நன்றாக நடத்த முடியும்.. தற்போது இந்திய டீம் நன்றாக உள்ளது. ஆல் ரவுண்டர்ஸ் தேவை. பெரிய அளவில் ஐசிசி தொடர்களில் வெற்றி பெற முடியும். கிரிக்கெட் போட்டியில் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் வளரலாம். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு அணிகளுக்கும், இந்தியாவுக்கு வந்தால் இந்திய அணி என்று தான் கருதப்பட்டு வருகிறது.


கிரிக்கெட் விளையாட்டு வீரர் நடராஜன் கடந்து வந்த பாதை அதுவே அவருக்கு வெற்றி தான். சில காயங்கள் ஏற்படும். சில தடுப்புகள் இருக்கும். ஆனால் அதை எல்லாம் தாண்டி வர வேண்டும், நடராஜன் கண்டிப்பாக வருவார். எனக்கு பிடிச்சது டெஸ்ட் கிரிக்கெட் தான். நீங்கள் நிறைய நாட்கள் விளையாடினால் உங்களது திறமையை வெளிப்படும்.  உலக கோப்பை மிக எளிது கிடையாது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று தான் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவார்கள். விளையாட்டு வீரர்கள் ஒரு நேரத்தில் மேலே மற்றொரு நேரத்திற்கு கீழே ஆகும். தற்போது இந்தியாவில் வீரர்கள் தேர்வு என்பது சரியாகத்தான் நடத்தப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா நடைபெறும் போது நல்ல விளையாட்டாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளை கேள்விக்கும் பாலாஜி பதில் அளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண