காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஜூடோ போட்டியில் மகளிர் பிரிவில் 20வது ஆட்டம் நடைபெற்றது. காலிறுதி ஆட்டமான இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான சுஷீலா தேவி லிக்மபாம் மலாய் நாட்டைச் சேர்ந்த ஹாரியட் போன்பேசுடன் மோதினர்.






இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான சுஷிலாதேவி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினர். அவருடைய பிடிக்கு எதிர் வீராங்கனையான ஹாரியட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால், இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலாதேவி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.






இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் விஜயகுமார் யாதவ், மொரிஷியசின் வின்ஸ்லி கங்கயாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுஷிலாதேவிக்கு ரசிகர்களும், வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண