Chess Olympiad 2024:'எங்க வந்து யாருகிட்ட'.. செஸ் ஒலிம்பியாட்! 5வது சுற்றிலும் இந்தியா ஆதிக்கம்! மிரளும் வீரர்கள்

உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் டி குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகெய்ஸ் இந்திய ஆண்கள் 45வது செஸ் ஒலிம்பியாட் ஐந்தாவது சுற்றில் அஜர்பைஜானை எதிர்த்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

Continues below advertisement

உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் டி குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகெய்ஸ் இந்திய ஆண்கள் 45வது செஸ் ஒலிம்பியாட் ஐந்தாவது சுற்றில் அஜர்பைஜானை எதிர்த்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

Continues below advertisement

செஸ் ஒலிம்பியாட் 2024:

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெற உள்ள இந்த தொடர் செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கியது. அந்தவகையில் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இன்று (செப்டம்பர் 16) 5வது சுற்று நடைபெற்றது.

இதில் இந்திய ஓபன் பிரிவில் இந்திய அணி சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர் டி குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைஸ் ஆகிய இரு திறமை வாய்ந்த வீரர்களும் பங்கேற்றனர். அதன்படி இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை எதிர்கொண்டது. அஜர்பைஜான் சார்பில் மற்றொரு திறமை வாய்ந்த வீரர்களான அய்டின் சுலேமன்லி மற்றும் ரவுஃப் மாமெடோ பங்கேற்றனர்.

ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்:

இதில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை எ திர்த்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  அதேபோல்,பிரக்ஞானந்தா மற்றொரு டிராவில் விளையாடி இந்திய வெற்றியை மட்டுமே உறுதி செய்தார், அதே சமயம் விடித் குஜ்ராத்தி மராத்தான் ஆட்டத்தில் ஷாக்ரியார் மமேதியரோவுடன் டிரா செய்து வெற்றியை நிறைவு செய்தார். ஐந்தாவது வெற்றியைப் பெற்ற பிறகு, இந்திய ஆண்கள் பத்து புள்ளிகளுடன் இருக்கின்றனர். அதேபோல் வியாட்நம் அணியிம் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு போட்டியாக உருவெடுத்துள்ளது.

போலந்தை 2.5-1.5 என்ற கணக்கில் வியாட்நம் வீழ்த்தி உள்ளது. ஸ்பெயின் மற்றும் உக்ரைனுக்கு எதிராக முறையே 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சீனா மற்றும் ஹங்கேரியும் சுறுசுறுப்புடன் போட்டியில் முன்னேறி வருகிறது. மிகப்பெரிய செஸ் போட்டிகளில் ஒன்றான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்னும் ஆறு சுற்றுகள் மீதம் இருக்கிறது.

இதில் மேக்னஸ் கார்ல்சனின் நார்வே மற்றும் ஈரான் ஆகிய இரு அணிகள் மட்டும் தலா 9 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது. துருக்கி அணியை நார்வே 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது, ஈரான் பெரும்பாலான வாய்ப்புகளை கனடாவை 3.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தியது. மகளிர் பிரிவில் கஜகஸ்தான் அணிக்கு கிராண்ட்மாஸ்டர் டி.ஹரிகா அதிர்ச்சித் தோல்வியைத் கொடுத்தார். இப்படி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது செஸ் ஒலிம்பியாட்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola