திரையுலகில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்று சைமா விருது. கடந்தாண்டு வெளியான தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருது வழங்கும் சைமா விழா துபாயில் நடைபெற்றது.


இதில் தமிழில் சிறந்த நடிகை யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. அதில் சித்தா, மாவீரன், ஜெயிலர், பொன்னியின் செல்வன், லியோ, அன்னபூரணி படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த நடிகையாக நயன்தாரா தேர்வு செய்யப்பட்டார். நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.






விருது பெற்ற நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படத்தை சைமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நயன்தாரா நெற்றியில் விக்னேஷ்சிவன் முத்தமிட்ட புகைப்படத்தை பதிவிட்டு, உண்மையான சக்திவாய்ந்த ஜோடி. நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் சைமாவில் தகுதியான விருதுகளைப் பெற்றதால், வெற்றிகரமான இரவை கொண்டாடினார்கள். இது அவர்களின் அங்கீகாரம் மற்றும் சாதனை தருணத்தை குறிக்கிறது என்று பதிவிட்டுள்ளது.


அன்னபூரணி படம் தமிழ் சினிமாவின் வந்த வித்தியாசமான முயற்சியாகவே கருதப்படுகிறது. அந்த படத்தில் சமையற்கலைஞராக ஆசைப்படும் நயன்தாரா எவ்வாறு தலைசிறந்த சமையல் கலைஞராக மாறினார்? ஒரு விபத்து அவரது வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது? என்று கதைக்களத்துடன் அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதித்தாக கூறி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூர்ணி நீக்கப்பட்டது. ஆனால், அன்னபூரணி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.


சைமாவின் சிறந்த நடிகைக்கான விருது நடிகை நிமிஷா விஜயன் அல்லது த்ரிஷாவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை நயன்தாரா யாரும் எதிர்பார்க்காத வகையில் விருதை வென்று அசத்தினார்.