சென்னை நுங்கம்பாக்கத்தில் 21 ஆண்டுகளாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. 2017ஆம் ஆண்டு முதல் அந்தப் போட்டி நடைபெறுவது நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புனேவிற்கு மாற்றப்பட்டது. இந்தச் சூழலில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. டபிள்யூ டிஏ டூர் 250 மகளிர் டென்னிஸ் தொடர் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண