ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் சானியா மிர்சா- போபண்ணா இணை தோல்வியை தழுவியது.


இறுதி போட்டியில் ஸ்டெஃபானி-மெடோஸ் இணையிடம் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது.


இந்திய ஜோடி தோல்வி:


ஆஸ்திரேலிய ஓபன் டடென்னிஸ் போட்டியின் கலப்பு பிரிவின் இரட்டையருக்கான இறுதி போட்டி இன்று ( வெள்ளி கிழமை ) நடைபெற்றது. இந்திய ஜோடிகளான சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியும் பிரேசில்-ன் லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியும் மோதின.






இப்போட்டியில், 7-6, 6-2 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியிடம் தோல்வியை தழுவியது.


இதற்கு முன்பு, இது தான் தனது கடைசி கிராண்ட்ஸ்லம் போட்டி என்று சானியா மிர்சா குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறியது, ரசிகர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Also Read: IND Vs NZ, 1st T20: பாண்ட்யா தலைமையில் களமிறங்கும் இளம் டி-20 இந்திய அணி.. பதிலடி தருமா நியூசிலாந்து!..