கரூரில் அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடங்கியது. தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு அசையாமல் நின்று மரியாதை செலுத்திய அண்டை மாநில வீராங்கனைகள் செயல் பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார். இதில் ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




கரூரில் 63-ம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வரும் இப்போட்டி 27-ந்தேதி வரை 6 நாட்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது. ஆண்களுக்கான போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையிலும், பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையிலும் நடைபெற உள்ளன.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றனர். முதல் நாள் ஆட்டத்தில் கேரளா போலீஸ் மற்றும் தென்னக ரயில்வே ஆகிய இரு அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடினர். திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால்  பார்வையாளர்கள் கவலையுடன் திரும்பினர்.




முன்னதாக போட்டி துவங்கும் முன் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. கேரளா போலீஸ் மற்றும் தென்னக ரயில்வே ஆகிய இரு அணிகளில் உள்ள அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அசையாமல் நின்று மரியாதை செலுத்திய நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண