கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 




தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து ராஜ அலங்காரத்தில் கையில் வேலுடன் சுவாமி காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பாலமுருகனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.விசுவர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாக சிறப்பு அபிஷேக அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.




தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு அலங்காரவல்லி, அருள்மிகு சவுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமி வெள்ளி மயில் வாகன திருவீதி உலா காட்சி அளித்தார்.ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தன.கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம் நிகழ்ச்சியை முன்னிட்டு முருகப்பெருமாள் வள்ளி, தெய்வானை உடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.



தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கருட வாகனத்தில் திருவீதி உலா.





தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாள்தோறும் சுவாமி உற்சவர் திருவீதி விழா நடைபெற்ற நிலையில் இன்று மாரியம்மன் கருட வாகனத்தில் திருவீதி விழா காட்சி அளித்தார்.மேல தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து புறப்பட்ட மாரியம்மன் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. ஆலயம் வந்த மாரியம்மன் க்கு ஆலயத்தின் பூசாரி கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.அதைத் தொடர்ந்து திருவதிவிலா மிக சிறப்பாக நடைபெற்றது.மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கருட வாகனத்தின் வீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.