தெலுங்கு காலண்டரின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ’யுகாதி’(Ugadi) எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மார்ச் 22-ம் தேதி (புதன்கிழமை) தெலுங்கு புத்தாண்டு(Telugu New Year) கொண்டாடப்படுகிறது.


ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது.ஒடிசாவில்  இது  ‘பனா சங்க்ராந்தியாக’ அழைக்கப்படுகிறது.  மேற்கு வங்கத்தில், ‘பொய்லா  பாய்சாக்’ புதிய ஆண்டில் தொடங்குகிறது  மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹூ’ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால்,  இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன. 


யுகாதி அன்று செய்யப்படும் பிரசாதம்:


வேப்பிலை, உப்பு, மாங்காய், புளி, இனிப்பு சேர்த்து செய்யப்படும் பிரசாதம் செய்யப்படுகிறது. பண்டிகை அன்று காலை எண்ணெய் தேய்த்து குளியல் செய்தபிறகு பூஜை மேற்கொள்ளலாம். வேப்ப இலையால் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பின்பு, மற்ற இனிப்பு பலகாரங்களை அனைவரும் பகிர்ந்து தரலாம்.


பச்சடி என்ற சிறப்பு உணவு ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்பட்டு அனைவராலும் ருசிக்கப்படுகிறது. இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய அனைத்து சுவைகளையும் உள்ளடக்கிய ஒரு முக்கிய உகாதி உணவாக பச்சடி உள்ளது. புத்தாண்டில் அனைத்து விஷயங்களையும் அனுபவிக்கும் சமமான மன நிலையை உருவாக்க வேண்டும் மற்றும் அதை ஏற்றுக்கொண்டு முழுமையாக வாழ வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதற்கான அடையாளமாக இது உள்ளது. 


புத்தாண்டை முன்னிட்டு, சிலர் தங்கள் வீட்டிற்கு வெள்ளை வர்ணம் பூசுவார்கள். மேலும், வீட்டு வாயிலில் ரங்கோலி வரையப்படும். வீட்டைச் சுற்றி அலங்கரிக்க மா இலைகள் பயன்படுத்தப்படும். புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடப்படும் யுகாதி அன்று தொடங்கப்படும் புது காரியங்கள் வெற்றியடையும் என நம்பப்படுகிறது. 


யுகாதி வரலாறு, முக்கியத்துவம்:


யுகாதி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான யுகா (வயது) மற்றும் ஆதி (ஆரம்பம்) என்பதிலிருந்து உருவானது, அதாவது ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது பொருளாகும். இது இந்து சந்திர நாட்காட்டி மாதமான சைத்ராவின் முதல் நாளில் அனுசரிக்கப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. இந்த நாளில்தான் பிரம்மா பூமியின் பகுதிகளை உருவாக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. 
 
யுகாதி அன்று மொரீஷியஸ் நாட்டிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அங்கு கணிசமான அளவு இந்துக்கள் வாழ்வதால் யுகாதிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.