உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத தலங்களில் 'அக்னி' தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆகும். காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 14-ம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலம் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றும், 10 நாள் உற்சவம் ஆரம்பமாகும். 7-ம் நாளில் 'மகா தேரோட்டம்' நடைபெறும். விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஒரே நாளில் 5 தேர்கள் பவனி என்பது கூடுதல் சிறப்பாகும்.


 




 


ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு நடைபெற்றும் என்பதால் காலையில் தொடங்கும் மகாதேரோட்டம் இரவு வரை நடைபெறும். கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 'மலையே மகேசன்' என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் நவம்பர் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம். இதற்காக, 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படும். மகா தீபத்தை பருவதராஜகுல வம்சத்தினர் ஏற்றிவைப்பது வழக்கம். இதையடுத்து, திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அக்னி பிழம்பாக காட்சி தரும் அண்ணாமலையாரை குளிர்விக்க தீர்த்தவாரி நடைபெறுவதாக புராணங்கள் கூறுகின்றன.


 




அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. கார்த்திகை தீப திருவிழாவின் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள இன்று 21-ம் தேதி பந்தகாலிற்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. அதன் பிறகு பந்தகால் சம்மந்த விநாயகர் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தகால் முகூர்த்தம் காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பந்தக்கால் நடப்பட்டது. அதன் பிறகு பந்தக்லிற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உட்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் சாமி தரிசனம் செய்தனர்.