செல்வத்தை வழங்கும் திருச்சானூர் மகாலட்சுமி !!!


அன்பார்ந்த வாசகர்களே  இன்றைய நவீன யுகத்தில்  மனிதனுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு  செல்வம் மிகுந்த முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் அனைவருமே வேலை செய்வது செல்வத்திற்காக தான்.  இவ்வளவு ஏன் உலக கோடீஸ்வரர்கள் கூட  அடுத்த கட்டமாக எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று தான் யோசனையில் இருக்கிறார்கள்.  இப்படியான சூழ்நிலையில்  எவ்வளவு பெரிய இக்கட்டான  சந்தர்ப்பத்தில் நீங்கள் இருந்தாலும்  உங்களுக்கான செல்வத்தை வாரி வழங்குவதற்காக  மகாலட்சுமி என்றுமே காத்திருக்கிறார்.  லட்சுமி கடாக்ஷம் இருந்தால் வாழ்க்கையில் அத்தனை செல்வங்களும் சேரும்.


கோடீஸ்வரனாக்கும் திருச்சானூர் மகாலட்சுமி வழிபாடு !!!


திருப்பதியில் இருந்து  15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சானூர்.  இந்த ஊரில் தான்  பத்மாவதி தாயார் மகாலட்சுமியாக எழுந்தருளி நமக்கு காட்சி அளிக்கிறார்.  தாமரை மலர்களால்  லட்சுமிதேவியை அலங்கரிக்க வேண்டும்.  மகாலட்சுமிக்கு பிடித்த மலர் தாமரை.  திருச்சானூர் நீங்கள் செல்லும் போதே  வழியிலேயே தாமரை மலர்களை விற்பனைக்காக வைத்திருப்பார்கள்.  அவைகளை வாங்கிக்கொண்டு  கோவிலுக்கு உள்ளே செல்ல வேண்டும்.  அங்கே ஒவ்வொரு பிரகாரங்களில்  அஷ்ட லட்சுமிகளின்  சிலைகள் இருக்கும்.  அவர்களை மனதார வணங்கிக் கொண்டு  கோவிலின் உள்ளே  செல்லும் பொழுது  அங்கே நமக்காக காத்திருக்கிறார் திருச்சானூர் மகாலட்சுமி. 


ஒரு ஜாதகத்தில்  ஒன்பது கோள்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும்  உங்களின்  சௌகரியங்களை  செல்வ வளங்களை குறிப்பது சுக்கிரன் மட்டுமே.  ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருந்தால் மட்டுமே  அவரால்  மிகுந்த செல்வங்களை அனுபவிக்க முடியும்.  அதற்கு சுக்கிரன் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருக்க வேண்டும் என்பது இல்லை.  ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு பதினொன்றாம் இடத்தில் சுக்கிரன் இருந்தாலே போதும்.  அவர் அனைத்து விதமான சுகங்களை அனுபவித்து விடுவார்.  மேலும் சுக்கிரன் நல்ல இடங்களில் அமரும்போது ஜாதகருக்கு செல்வம் செல்வாக்கு  பிறப்பிலேயே கிடைத்துவிடும்.


ஒருவேளை சுக்கிரன் வலுவிழந்து காணப்பட்டது என்றால்  நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருச்சானூர் மகாலட்சுமியை பார்க்க.  ஒருமுறை தாயாரை சென்று தரிசித்து வந்தால் நிச்சயமாக மாற்றம் நிகழும்.  மனிதன் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு  பணம் முக்கியம் தான்  ஆனால் பணமே வாழ்க்கை இல்லை என்பது உண்மை.  அப்படித்தான் திருச்சானூர் மகாலட்சுமியும் நமக்கு பணத்தை மட்டுமே வழங்குவதில்லை  அதனுடன் சேர்த்து சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதையும்  கௌரவத்தையும் வழங்குகிறார்.


எந்த நாளில் வணங்க வேண்டும் ?


மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமையை எடுத்துக் கொள்ளலாம்.  வெள்ளிக்கிழமையில் காலை 6:00 மணிக்கே  மகாலட்சுமியின் தரிசனம் சிறந்ததாக சொல்லப்படுகிறது.  அப்படி இல்லை என்றாலும்  உங்களை எந்த தினத்தில் எத்தனை மணிக்கு தாயார் அழைக்கிறாரோ  அத்தனை மணிக்கு நீங்கள் அவரை சென்று தரிசிப்பதற்கான வாய்ப்பு கிட்டும்.  பொதுவாக ஜோதிடர்கள் சொல்வது


வெள்ளிக்கிழமை அன்று.  ஆனால் ஒவ்வொரு ராசிக்கும் கிழமைகள் மாறுபடும்.  உதாரணத்திற்கு  சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் மீன ராசியில் உச்ச நிலையில் இருந்தால் நீங்கள் வியாழக்கிழமை  திருச்சானூர் சென்று மகாலட்சுமி தரிசிப்பது சிறந்தது.  ஒருவேளை  மிதுனம் அல்லது கன்னியில் சுக்கிரன் இருந்தால் நீங்கள் புதன்கிழமையோ அல்லது சனிக்கிழமையோ தாயாரை சென்று தரிசிப்பது சிறந்தது.


விரதம் இருக்கலாமா ?


அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப விரதங்களை கடைபிடிக்கலாம்.  ஆனால் கட்டாயம் இல்லை.  தாயார் மகாலட்சுமி என்பவர்  அன்னலட்சுமி ஆகவும் நமக்கு காட்சியளிக்கிறார்.  மற்றவர்கள் உணவு உண்பதை பார்த்து ரசிப்பவர் தான் நம் தாயார்.  ஒருவேளை நீங்கள் விரதம் இருந்து தாயார் சன்னதிக்கு வருகிறேன் என்று  வாக்குறுதி கொடுத்து இருப்பீர்கள் ஆனால்  அதற்காக வேண்டுமென்றால் நீங்கள் விரதத்தை கடைபிடிக்கலாம்.  பொதுவாக திருச்சானூர் கோவிலுக்கு செல்லும் பொழுது பழங்களை உண்டு விட்டு செல்வது மிக மிக சிறப்பு.  அசைவ உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.


மகாலட்சுமி வழங்கி வந்தால் என்ன பலன் ?


பலன் கிடைக்குமே என்று ஒருபோதும் நாம் கோவிலுக்கு செல்லக்கூடாது.  நாம் செல்லுகின்ற கோவிலில் இருக்க கூடிய மூலவரை மனதார வணங்கி வர வேண்டும்.  நீங்கள் எடுத்த உடனேயே உங்களுடைய கோரிக்கையை தயார் இடம் வைக்க


வேண்டாம்.  ஏனென்றால் உங்களின் கோரிக்கை என்னவென்று தாயாருக்கு நன்றாக தெரியும்.  இப்படியான சூழ்நிலையில் நிச்சயமாக நீங்கள் திருச்சானூர் சென்று தாயாரை தரிசித்து வரும் பொழுது உங்களுடைய அனைத்து பண பிரச்சனையும் முடிவுக்கு வரும்.  சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதையோடு கவுரவத்தோடு வாழப் போகிறீர்கள்.  எடுத்த காரியங்கள் வெற்றி ஆகும்.  தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.  வேலை ஸ்தளத்தில் நீங்கள் அதிகாரிகளால் பாதிக்கப்படுவீர்கள்.  வீடு வாகனம் போன்றவை சாதாரணமாக கிடைக்கும்.  இப்படிப்பட்ட நல்ல வாழ்க்கைக்கு தேவையான சகல செல்வங்களையும் திருச்சானூர் தாயார் நமக்கு வழங்குகிறார்.  உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் திருச்சானூர் சென்று மகாலட்சுமி தாயாரை வணங்கி வாருங்கள்.  அங்கே பத்மாவதி தாயார் உங்களுக்காக காத்திருக்கிறார் வாழ்த்துக்கள் வணக்கம்.