கோவையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குண்டம் திருவிழா பிரபலமாக இருந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். இந்தாண்டு  குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி 85 அடி மூங்கில் கொடி கம்பம் ராஜ கோபுரம் அருகே நடப்பட்டது. இதனை அடுத்து மயான பூஜை ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் கடந்த மூன்றாம் தேதி நடுநிசியில் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை தொடங்கியது. இதில் 47 அடி நீலமும் 11 அடி அகலம் கொண்ட குண்டத்துக்கு கோவில் பூசாரிகள் பூஜைகள் செய்யப்பட்டு, முதலில் குண்டத்தில் பூ பந்து எலுமிச்சம் பழத்தை உருட்டி விட்டனர்.




பின்னர் கோவில் பூசாரிகள் ஒவ்வொருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ’மாசாணி தாயே போற்றி’ என்ற கோஷத்துடன் குண்டத்தில் இறங்கி தங்கள் நேத்தி கடனை செலுத்தினர். இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு சில காவல் துறையினரும் குண்டத்தில் இறங்கினர். பிரசித்தி பெற்ற இந்த குண்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இந்த குண்டம் விழாவை முன்னிட்டும், பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதியும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண