திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி கோயிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுகிறது இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.





சுப்பிரமணிய சுவாமி கோயில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா நாளை நடைபெறுகிறது இதனை முன்னிட்டு நாளை அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 01:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, காலை 10:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு உச்சி கால தீபார தனையும் மாலை ஐந்து மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் 6 மணிக்கு இராக்கால அபிஷேகமும், இரவு 7:30 மணிக்கு ஏகாந்த தீபாரதனையும், இரவு எட்டு மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோயில் திருக்காப்பிடப்படும்.




பிற்பகலில் உச்சி கால அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமி அலைவாயு கந்த பெருமாள் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சென்றடைகிறார்.தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி,திருநெல்வேலி,விருதுநகர்,ராமநாதபுரம்,கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.




திருநெல்வேலி,தூத்துக்குடி மார்க்க சாலையில் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும்,காவடி எடுத்தும் அணி அணியாக திருச்செந்தூருக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் முருக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது திருச்செந்தூருக்கு மதுரை ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 




திருச்செந்தூரில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறும் போது, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி இரண்டு டிஎஸ்பிக்கள் 13 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விபத்துகளை தவிர்க்கும் முறை வலது புறமாக நடந்து கொள்ள வேண்டும்.




அதேபோன்று பாதயாத்திரை பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக செல்ல வேண்டும். மேலும் சாதி ரீதியிலான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பணியன்கள் சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவும் கொடிகளை கொண்டு வரவும் கூடாது என்று தெரிவித்தார். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலை துறையும் எச்சிஎல் நிறுவனமும் இணைந்து 300 கோடியில் பெருந்துட்டவளாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த பணிகளை தமிழக இந்து அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.