அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.





கரூர் மாவட்டம் கரூர் வட்டம் மூக்கனாங்குறிச்சி கிராமம் சின்னம்ம நாயக்கம்பட்டி கிராமத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர் .


பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் ஆலயம் அருகே பிரத்தியேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்ட பின்னர் மூன்று கால யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து யாக வேள்விக்கும், புனித தீர்த்த கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.


 




 


அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆலயத்தின் சிவாச்சாரியார் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தை தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தார். பின்னர் கோபுர கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முத்தாலம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்ட பிறகு மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நிறைவு பெற்றது.


 


 





கரூர் சின்னமநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.