கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு பகல்பத்து நிகழ்ச்சியும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக இராபத்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


 





இந்நிலையில் இறுதி நாளான இன்று உற்சவர் அபய பிரதான ரங்கநாத ஸ்வாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலய மண்டபத்திலிருந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டினார். அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலய வலம் வந்த பிறகு ஆண்டாள் சன்னதி அருகே மாலை மாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.


பின்னர் ஆஞ்சநேயருக்கு துளசியால் சிறப்பு அர்ச்சனை நடைபெற்ற பிறகு சுவாமிக்கு கும்ப ஆலாத்தியுடன், மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதேசியின் சிறப்பு திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.




உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.



 


கரூர் உழவர் சந்தை பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு என்னைக் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய் , இளநீர் , எலுமிச்சை சாறு,  திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார். அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை


கரூர், நொய்யல் அருகே உள்ள வருண கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வருட கணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.