கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சுவாமி பகல் பத்து முதல் நாள் திருவீதி உலா நடைபெற்றது.


 




 


கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு  பத்து முதல் நாள் சுவாமி திருவீதி உலா ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க சுவாமியின் முதல் நாள் திருவீதி உலா ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.


 




 


இந்நிலையில் ஆண்டாள் சன்னதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல் தொடர்ந்து பத்து நாளைக்கு பகல் பத்து நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து இராபத்து நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


 





 


கரூர் அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சுவாமி பகல் பத்து திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.