அழகன் பாலமுருகனுக்கு அபிஷேகம்.


அண்ணா சாலை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள அழகன் பாலமுருகனுக்கு மார்கழி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் பாலமுருகனுக்கு மார்கழி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், அபிஷேகபொடி, மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாரதனை நடைபெற்றது. ஆலயத்தின் நடைபெற்ற மார்கழி மாத சிறப்பு பூஜைக்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.


மார்கழி மாதத்தை முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலய மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.




 



கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கணபதிக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், அபிஷேக பொடி, மஞ்சள், சந்தனம்,விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 



 


அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியை காட்டினார். அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலயத்தின் நடைபெற்ற மார்கழி மாத சிறப்பு அபிஷேகத்திற்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.