அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகை பூஜை அழகர் பாலசுப்பிரமணிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.


 




 


கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அழகன் பாலமுருகனுக்கு ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு சாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,எலுமிச்சை சாறு, திருமஞ்சள்,மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.  சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் பால முருகனுக்கு நடைபெற்ற ஆவணி மாத கார்த்திகை பூஜைக்கான ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.


எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு ஆவணி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.


 




கரூர் நகரப் பகுதியான எல்ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்த வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு சாமிக்கு என்னை காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர்,எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் , குங்குமம் ,விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


ஆலயத்தின் சிவாச்சாரியார் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அறிவித்த பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார். உதிரிப்பூக்களால் நாமாவளிக்க கூடிய பிறகு சாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் எல்ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகன் ஆவணி மாத கிருத்திகா பூஜைக்கான ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.