கரூர் எல்ஜிபி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு சஷ்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


 


 




கரூர் நகரப் பகுதியான எல்ஜிபி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீகுபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு பங்குனி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பாலமுருகனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 


 




அதன் தொடர்ச்சியாக அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் எல்ஜிபி நகர் அருள்மிகு ஸ்ரீ குபேரே சக்தி விநாயகர் ஆலயத்தில் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு பங்குனி மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சஷ்டி கிருத்திகை முன்னிட்டு  பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்தங்கி அலங்காரம்  நடைபெற்றது.


 


 




 


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அழகன் பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் அர்ச்சனை கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு அனைவருக்கும் பிரசாத வழங்கப்பட்டது.


 


 




 


கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு பங்குனி மாத சஷ்டி மற்றும் கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.