தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளி தேர் வீதி உலா உற்சவம் நடைபெற்றது. நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வந்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில்

 


கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி முருகன் திருக்கோயிலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு வெள்ளித்தேர் வீதி உலா உற்சவம்  விமரிசையாக நடைபெற்றது.



 

தைப்பொங்கல் தேர் வீதி உலா 

 

தைப்பொங்கல் வெள்ளி தேர் வீதி உலா உற்சவத்தை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள் மலர் மாலைகள் அணிவித்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்தனர்.

 


நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா


சுவாமி தரிசனம் 

 

பின்னர் மேளதாளம், பேண்ட், வாத்தியங்கள், முழங்க காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக வெள்ளித்தேர் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நான்கு ராஜ வீதிகள் வழியாக வெள்ளித்தேரில் உலா வந்த முருகப்பெருமானை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

 


நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா


 

 தல வரலாறு
 
மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.

 


நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா



 பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.