தஞ்சாவூர்: தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஆதிசேஷன் வழிபட்டு இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார். சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது. கும்பகோணத்திலுள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுவது நாகேஸ்வர சுவாமி கோவிலாகும். "குடந்தைக் கீழ்க்கோட்டம்" என இது குறிப்பிடப்படுகிறது. குடந்தை கீழ்கோட்டம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோவில். இத்திருக்கோவிலில் 40 கல்வெட்டுகள் உள்ளன. தென்காசி திருக்கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன்(கிபி 1411-1463) ஒரு கல்வெட்டு அமைத்துள்ளான். இந்த நூற்றாண்டில் பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் என்னும் மகான், தம் கழுத்தில் பித்தளை சொம்பு (உண்டியல்) கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பது போல் சிறுக சிறுக பொருள் சேர்த்து, புதர் மண்டிக் கிடந்த இக்கோவிலை திருப்பணி செய்து 1923 ஆம் ஆண்டு கும்பாபிஷகம் செய்து வைத்தார்.
கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருத்தேரோட்டம்
என்.நாகராஜன் | 05 Apr 2023 12:50 PM (IST)
தேவாரப்பாடல் பெற்ற கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருத்தேரோட்டம்
திருத்தேரோட்டம்
Published at: 05 Apr 2023 12:50 PM (IST)