அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆறாம் கால யாக பூஜையுடன் இன்று துவங்கியது. தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நாளை காலை பழனி மலைக்கோவில் மூலஸ்தான தங்க விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலவர் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பழனி வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடம், கும்பாபிஷேகத்தை தடையின்றி காண ஆங்காங்கே led திரைகள், மூன்று இடங்களில் அன்னதானம் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தின் போது குறைவான அளவிலேயே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்