அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆறாம் கால யாக பூஜையுடன் இன்று துவங்கியது. தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 




திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம்தேதி அன்று யாகாசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆறாம்கால யாகபூஜையுடன் துவங்கிய பழனி கோவில் கும்பாபிஷேகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை பழனி மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோவில், படிப்பாதையில் உள்ள இடும்பன் கோவில், கடம்பன்கோவில், கருப்பணசாமி  சுவாமி கோவில், கிரிவீதியில்  உள்ள ஐந்து மயில்கள்,  கோவில் உட்பட 80க்கும் மேற்பட்ட திருக்கோவில் மற்றும் தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி நடைபெற்றதை தொடர்ந்து காலை 9.50 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.



தொடர்ந்து நாளை காலை பழனி மலைக்கோவில் மூலஸ்தான தங்க விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலவர் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பழனி வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடம், கும்பாபிஷேகத்தை தடையின்றி காண ஆங்காங்கே led திரைகள், மூன்று இடங்களில் அன்னதானம் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தின் போது குறைவான அளவிலேயே பக்தர்கள் தரிசனம் செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண