பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயில் வளாகம் குடமுழுக்கு விழாவை எதிர்கொள்ளும் விதமாக மின்னொளியில் மிளிரச் செய்யப்பட்டுள்ளது.  குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை பிற்பகல் முதல் சுவாமிக்கு திரையிடப்படவுள்ள நிலையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடும் நிறுத்தப்படவுள்ளது.


ABP Nadu Exclusive: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னதான் உள்ளது ? - ஹேப்பி நியூஸ் உள்ளே?




 பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் ஜனவரி 27ம் தேதி காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.  16 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நடைபெறும் இவ்விழாவை காண இலட்சக்கணக்கான பக்தர்கள் காத்துள்ளனர். மலைக்கோயிலில் சுமார் ஆறாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.  


Governor RN Ravi: "சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்" - நேதாஜி பிறந்தநாளில் ஆளுநர் பேச்சு..!




விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் 90க்கும் மேற்பட்ட யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு ஓதுவார்கள், சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் முழங்கி வருகின்றனர்.  பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கப்படுவதோடு பக்தர்கள் அந்த நேரத்தில் மட்டும் இலவசமாக பழனிக்கு வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  மலைக்கோயில் முதல் பாதவிநாயகர் கோயில் வரை குடமுழுக்கு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஜனவரி 26ம் தேதி பாதவிநாயகர் கோயில் முதல் படிப்பாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  


Erode East By Election: “காங்கிரஸை ஜெயிக்க பெரிய கட்சியா இருக்கணும்; எடுத்தோம் கவிழ்த்தோம்னு சொல்ல முடியாது” - அண்ணாமலை




மலைக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை பிற்பகல் நடை அடைக்கப்பட்டு மூலவர் சன்னதியில் பணிகள் துவங்கவுள்ளது.  இதனால் குடமுழுக்கு நாளன்று வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க இயலாது.  அதே போல நாளை முதல் தங்கத்தேர் புறப்பாடும் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இராஜகோபுரம் முதல் தங்ககோபுரம் வரையிலும் மலைக்கோயில் பிரகாரங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  இதனால் மலைக்கோயில் இரவு நேரத்தில் தகதகவென ஜொலிக்கும வகையில் உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண