Shivaratri 2025: இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது மயூர நாட்டியாஞ்சலி.. உற்சாகத்தில் பார்வையாளர்...!

சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது.

Continues below advertisement

மயிலாடுதுறையில் மயூரநாதர் கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது.

Continues below advertisement

மயூரநாதர் திருக்கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான பிரசித்தி பெற்ற மயூரநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த மகா சிவராத்திரி விழாக்களில் மயிலை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 18 -ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 

"தமிழ்நாடு வெறும் பெயர் மட்டும் இல்ல.. அதுதான் எங்க அடையாளம்" கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்!

மகா சிவராத்திரி விழா 

இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகின்ற பிப்ரவரி 26 -ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19 -ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வானது தொடர்ந்து பிப்ரவரி 23 -ம் தேதி முதல் பிப்ரவரி 26 -ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பாராளுமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைக்க உள்ளனர்.

TN Govt SC: ஆளுநர் சும்மாவே இருக்கட்டும், உச்சநீதிமன்றம் சொன்னா போதும் - தமிழ்நாடு அரசின் புது ரூட்..!

500 -க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 

தொடர்ந்து திருக்கோவிலூர் பாலாஜி குழுவினர் மங்கல இசை, கிருஷ்ணம் வந்தே ஜகத்தகுரும் ஸ்ரீ நாட்டிய நிகேதனின் நாட்டிய நாடகம். சென்னை கிருஷ்ணா நாட்டிய பள்ளி பத்மபூஷன் குரு ஷோபனா மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, மயிலை சப்த ஸ்வரங்களின் ராமாயணம் நாட்டிய நாடகம், வாலஜா லாஸ்யா பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரின் பரதநாட்டியம் இன்றும் அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறுகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola