ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய பஞ்சவடீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


மானகஞ்சாற நாயனார் அவதாரித்த ஸ்தலம்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த பஞ்சவடிஸ்வரர் திருக்கோயில். இங்கு 63 நாயன்மார்களின் மானகஞ்சாற நாயனார் அவதாரம் செய்து இறைவன் திருவிளையாடல் நடத்திய ஸ்தலம் ஆகும். மேலும் ஆனந்த முனிவருக்கு இறைவன் ஸ்ரீமுக தாண்டவம் ஆடி காட்டிய ஆலயமும் இதுவாகும். இதன் காரணமாகவே இவ்வூருக்கு ஆனந்த தாண்டவபுரம் என்ற பெயர் பெற்றது.


கம்பம் ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா; 2000 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்




பஞ்சவடிஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 


இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நவக்கினி ஹோமம் நடைபெற்றது. 108 வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.


PM Modi on Rahul Gandhi: அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் - பிரதமர் மோடி பேச்சு!




தொடர்ந்து ஆறு காலம் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மகா பூர்ணாகுதிக்கு பிறகு மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சுவாமி அம்பாள் கருவறை கோபுரங்கள், ராஜகோபுரங்கள், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து சுவாமி அம்பாள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் கலசபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Bajaj Pulsar NS400Z: பஜாஜ் நிறுவனத்தின் மிகப்பெரிய பல்சர் மாடலான NS400Z அறிமுகம் - புதுசா என்னென்ன இருக்கு?